பேய் பிடித்ததாக 7 வயது சிறுவன் அடித்துக் கொலை… தாய் உள்பட 3 பெணகள் கைது!

 

பேய் பிடித்ததாக 7 வயது சிறுவன் அடித்துக் கொலை… தாய் உள்பட 3 பெணகள் கைது!

திருவண்ணாமலை

ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற தாய் மற்றும் அவரது சகோதரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு 7 வயதில் சபரி என்ற மகன் உள்ளான். இவருக்கு பேய் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை ஓட்டுவதற்காக நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் உள்ள மந்திரிப்பவரின் வீட்டிற்கு திலகவதி ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். அவரது சகோதரிகள் பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், நள்ளிரவில் 4 பேரும் வழியில் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் தங்கி உள்ளனர். அப்போது, சபரிக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு உள்ளது. இதனை பாரித்த திலகவதி மற்றும் அவரது சகோதரிகள் சரிக்கு பிடித்துள்ள பேய், நெஞ்சு வரைக்கும் வந்து விட்டது என நினைத்து, அவரது நெஞ்சில் தாக்கி உள்ளனர்.

பேய் பிடித்ததாக 7 வயது சிறுவன் அடித்துக் கொலை… தாய் உள்பட 3 பெணகள் கைது!

மேலும், சிறுவனின் நாக்கை பிடித்து கையில் இழுத்தும் துன்புறுத்தி உள்ளனர். சிறுவனின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த மூவரையும் தடுக்க முயன்றுள்ளனர். அதனையும் மீறி அவர்கள் தாக்கியதில் சிறுவன் துடிதுடித்து உயிரிழந்தான். பின்னர் பேய் திலகவதிக்கு ஏறியதாக கருதி, அவரையும் தாக்க தொடங்கினர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த கண்ணமங்கலம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திலகவதி உள்ளிட்ட மூவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, பேய் ஓட்டுவதற்காக அழைத்துச் சென்றபோது சிறுவனை அடித்துக்கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து,விசாரித்து வருகின்றனர்.