பயம் காட்டும் கொரோனா… தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

 

பயம் காட்டும் கொரோனா… தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

இந்தியாவை உலுக்கிய கொரோனா இரண்டாம் அலை ஜூலை மாத தொடக்கத்திலிருந்து தணிய ஆரம்பித்தது. தினசரி கொரோனா பாதிப்பானது 40 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. ஆனால் அவ்வப்போது 40 ஆயிரத்திற்கு மேல் செல்வதும் இரண்டு நாட்களில் குறைவதுமாகவே இருந்தது. வடகிழக்கு மாநிலங்களிலும் கேரளாவிலும் கொரோனா தொற்று உச்சத்திலேயே இருந்ததே அதற்குக் காரணம். அதேபோல தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை குறையாமலேயே இருந்துவந்தது. பெருமளவு குறைந்த சென்னையில் மீண்டும் படிபடியாக உயர்ந்தது.

பயம் காட்டும் கொரோனா… தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

இது மூன்றாம் அலை வருவதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நிபுணர்கள் இதை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள ஒருசில மாவட்டங்கள் உள்ளிட்ட 46 மாவட்டங்களைத் தனிக்கவனம் செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்திருந்தது. அதேபோல தொற்று கூடுவது போல் தெரிந்தால் உடனடியாக கட்டுப்பாடுகளை இறுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதன் காரணமாகவே சென்னை, கோவையில் கட்டுப்பாடுகளை அதிகரித்து தளர்வுகளைக் குறைத்து அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

பயம் காட்டும் கொரோனா… தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

இச்சூழலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய சுகாதாரத் துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியா முழுவதும் மொத்தம் 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு டிரெண்ட் அதிகரித்த வண்ணமே இருப்பதை சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா குறைந்துவரும்போது இம்மாவட்டங்களில் மட்டும் உயர்வது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பதிலேயே கேரளா தான் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. அங்கு 11 மாவட்டங்கள் கவலையளிக்கக் கூடியதாக இருக்கின்றன.

Coronavirus | Union Health Ministry Joint Secretary Lav Agarwal tests  positive - The Hindu

கடந்த வாரம் இந்தியாவில் பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கேரளாவில் மட்டுமே 51.51% கேஸ்கள் பதிவாகின. தமிழ்நாட்டில் 7, இமாச்சலப் பிரதேசத்தில் ஆறு, கர்நாடகாவில் 5, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் இருந்து தலா 2, மேகலயா, மிசோரத்தில் தலா 1 மாவட்டங்கள் கவலையளிக்கக் கூடிய மாவட்டங்களாக உள்ளன. இந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை உயர்த்தி கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார். தமிழ்நாட்டில் கோவை, சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்கள் இந்த லிஸ்டில் உள்ளன.