“எந்த அறிகுறியும் இல்லை”..ஒரே நாளில் கொரோனாவால் 7 பேர் உயிரிழப்பு!

 

“எந்த அறிகுறியும் இல்லை”..ஒரே நாளில் கொரோனாவால் 7 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம் தான். அதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,974 கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 அதிகரித்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் தான் குறைந்த அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எந்த அறிகுறியும் இல்லை”..ஒரே நாளில் கொரோனாவால் 7 பேர் உயிரிழப்பு!

இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டுமே 38 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதால், தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்த 38 பேரில் தனியார் மருத்துவமனையில் 16 பேரும், அரசு மருத்துவமனைகளில் 22 பேரும் சிகிச்சை பெற்று வந்ததாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 7 பேர் எந்த வித அறிகுறியும் இல்லாமல் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அறிகுறி இல்லாமலே மக்கள் உயிரிழப்பது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுவரை 41 பேர் அறிகுறி இல்லாமல் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.