கொரோனாவால் சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்..இன்று ஒரே நாளில் 7 பேர் மரணம்!

 

கொரோனாவால் சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்..இன்று ஒரே நாளில் 7 பேர் மரணம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் தான் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவிய உடன், வியாபாரிகள், காய்கறி இறக்குமதி செய்ய வந்தவர்கள், பொதுமக்கள் என பலருக்கும் கொரோனா அதிவேகமாக பரவியது. இதனை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நிர்வாகம் எடுத்துக் கொண்டே இருப்பினும் உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

கொரோனாவால் சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்..இன்று ஒரே நாளில் 7 பேர் மரணம்!

இந்நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும், ராஜூவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும், கேம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு சென்னையில் உயிரிழப்புகள் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.