மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டா: துண்டானது கர்ப்பிணியின் தலை!

 

மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டா:  துண்டானது கர்ப்பிணியின்  தலை!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி கல்பனா. இவர் 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். தர்மராஜ் அதேபகுதியில் மரம் அறுக்கும் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். கல்பனா தொழிற்சாலையில் பணிசெய்யும் ஊழியர்களுக்கு டீ கொண்டு போவது, அங்கு சின்ன சின்ன வேலைகள் செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டா:  துண்டானது கர்ப்பிணியின்  தலை!

இந்நிலையில் கல்பனா நேற்று வழக்கம்போல மரம் அறுக்கும் ஆலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது துப்பட்டா மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிகொண்டது. இதனால் இயந்திரத்திற்குள் இழுக்கபட்ட அவரின் தலை துண்டானது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டா:  துண்டானது கர்ப்பிணியின்  தலை!

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சூலூர் போலீசார் கல்பனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இயந்திரத்தில் மரத்தை வெட்டும் பகுதி திறந்து வைக்கப்பட்டிருந்ததே விபத்திற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி பெண் தலை துண்டாகி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.