மூச்சுத்திணறலால் 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

 

மூச்சுத்திணறலால் 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

ஈரோடு

அந்தியூர் அருகே மூச்சுத்திணறல் காரணமாக 7 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (35). இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவை சேர்ந்த சுமதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சுமதி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த சுமதிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது.

மூச்சுத்திணறலால் 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

இதனால், முத்துச்சாமி அருகில் இருந்தவர்கள் உதவியுடன், சுமதியை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்துச் சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சுமதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால், சுமதியின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது, காண்போரை கண் கலங்க செய்தது. இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.