பாத்திரம் வாங்க போன பையன் பலாத்காரம் -சிறுவனை சீரழித்த கூட்டம்

 

பாத்திரம் வாங்க போன பையன் பலாத்காரம் -சிறுவனை சீரழித்த கூட்டம்

ஒரு 17 வயது சிறுவனை வீட்டிற்கு வரவைத்து, அவரின் ஏழு நண்பர்கள் கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அந்த பகுதி வாசிகளிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியில் ஒரு 17 வயது சிறுவன் தனது நண்பனோடு விளையாடிக்கொண்டிருந்தான் .அப்போது அந்த நண்பன் அந்த 17 வயது பையனை தங்கள் வீட்டிற்கு வந்து அவர்களின் பாத்திரம் வாங்கிக்கொண்டு போக கூப்பிட்டான் .அதை நம்பிய அந்த டீனேஜ் பையன் அந்த நண்பன் கூப்பிட்ட அவனின் வீட்டிற்கு சென்றான் .அப்போது அந்த வீட்டில் அவனையும் சேர்த்து மொத்தம் 7 சிறுவர்கள் இருந்தார்களாம் ,அவர்களின் வயது 14 முதல் 17 வயதுக்குள் இருக்குமாம்
அப்போது வீட்டிற்கு அவனை தேடி பாத்திரம் வாங்க வந்த அந்த சிறுவனை அந்த நண்பன் வாயை பொத்தி ,கயிறு போட்டு கட்டியுள்ளான் .உடனே அந்த ஏழு சிறுவர்களும் சேர்ந்து கொண்டு அந்த 17 வயது சிறுவனை பலாத்காரம் செய்துள்ளார்கள் .
இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி வந்து இந்த விஷயத்தை தன்னுடைய சகோதரனிடம் கூறினார் ,அந்த சகோதரர் அவன் சொன்ன விஷயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தார் .உடனே அவர் தன்னுடைய தம்பியை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையாயத்தில் அந்த ஏழு சிறுவர்கள் மீது பாலியல் புகாரளித்தார் .போலீசார் அந்த புகாரை பெற்று அந்த ஏழு சிறுவர்களையும் கைது செய்து அவர்கள் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாத்திரம் வாங்க போன பையன் பலாத்காரம் -சிறுவனை சீரழித்த கூட்டம்