கோவையில் கோயில் குளத்தில் வீசப்பட்ட 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு!

 

கோவையில் கோயில் குளத்தில் வீசப்பட்ட 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு!

கோவை

கோவை அருகே கோயில் குளத்தில் மர்மநபர்கள் வீசிச் சென்ற 7 ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பேரூரில் உள்ள கோயில் குளத்தில் இன்று காலை ஐம்பொன் சிலைகள் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் பேரூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில், பேரூர் காவல் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து கோயில் குளத்தில் கிடந்த விஷ்ணு, அம்மன், விநாயகர் உள்ளிட்ட 7 ஐம்பொன் சிலைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கோவையில் கோயில் குளத்தில் வீசப்பட்ட 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அதில் மர்மநபர்கள் நள்ளிரவில் கோயில் குளத்தில் சிலைகளை வீசி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, பறிமுதல் செய்த ஐம்பொன் சிலைகள் வட்டாட்சியர் அலுவகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து, பேரூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில், சிலைகளை வீசி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.