ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு

 

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு

முன்னாள் முதல்வரின் செயலாளர்கள் ஜெயஸ்ரீமுரளிதரன், விஜயகுமார், சாய்குமார் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக தொழில்நுட்ப முதன்மை செயலாளராக நீரஜ் மிட்டல்

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநராக நியமனம்

சிப்காட் மேலாண் இயக்குநர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம்

பேரிடர் மேலாண்மை துறை இயக்குனராக சுப்பையன்

நுகர்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை ஆணையராக ஆனந்தகுமார் நியமனம்

டிஎன்பிஎஸ்சி செயலராக இருந்த நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம்

சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் பிரகாஷ், தமிழ்நாடு திறன் வளர் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமனம்

ஊரக நிதி மற்றும் உள்கட்டமைப்பு நிதி மேம்பாட்டு கழக கூடுதல் செயலாளர்/ தலைவராக சாய்குமார்

விஜயகுமார் சிறு, குறு மேம்பாட்டு கழக இயக்குநராக நியமனம்

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராக ஜெயசீலன்


பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் / தலைவராக சிவசண்முகராஜா நியமனம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது