முத்தூட் பைனான்ஸில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை!

 

முத்தூட் பைனான்ஸில்   துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை!

ஓசூர் முத்தூட் அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்தூட் பைனான்ஸில்   துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை!

இந்நிலையில் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ளது முத்தூட் பைனான்ஸ் அலுவலகம் உள்ளது. இங்கு 6 பேர் கொண்ட கும்பல் நுழைந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியரை துப்பாக்கியை காட்டி மிரட்டி சாவியை பெற்றுள்ளது. அலுவலகத்தில் இருந்த 25,091 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பைனான்ஸ் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமிரா மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முத்தூட் பைனான்ஸில்   துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை!

கடந்த 2019 ஆம் தேதி கோவையில் முத்தூட் நிதிநிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 804 சவரன் தங்க நகைகளை அங்கு பணிபுரிந்த ரேணுகா தேவி என்ற ஊழியர் கள்ளக்காதலன் சுரேஷ் என்பவரின் துணையுடன் கொள்ளையடித்தது நினைவுகூரத்தக்கது.