இளைஞர் கொலை வழக்கில் 7 பேர் கைது – சிறையில் அடைப்பு!

 

இளைஞர் கொலை வழக்கில் 7 பேர் கைது – சிறையில் அடைப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இளைஞர் கொலை வழக்கில் 7 பேர் கைது – சிறையில் அடைப்பு!

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இறந்த நபர் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் (26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தனி படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக, குபேந்திரன் ( 22 ), சண்முகம் ( 19) கிருஷ்ணமூர்த்தி (25) ஜாரீப் ( 22) ஸ்ரீதர் ( 23 ) லோகேஸ்வரன் ( 25 )மணிகண்டன் ( 22) உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

இளைஞர் கொலை வழக்கில் 7 பேர் கைது – சிறையில் அடைப்பு!