மாசமான பெண்களை குறி வைத்தார் -மாசம் ரெண்டு லட்சம் குவித்தார் -ஒரு டாக்டர் செய்த டகால்டி வேலை .

 

மாசமான பெண்களை குறி வைத்தார் -மாசம் ரெண்டு லட்சம் குவித்தார் -ஒரு டாக்டர் செய்த டகால்டி வேலை .


கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தையின் இனத்தை புது டெக்னீக் மூலம் கண்டுபிடித்து கூறி பல லட்சம் சம்பாதித்த டாக்டரையும், நர்ஸையும் போலீசார் கைது செய்தார்கள்.

மாசமான பெண்களை குறி வைத்தார் -மாசம் ரெண்டு லட்சம் குவித்தார் -ஒரு டாக்டர் செய்த டகால்டி வேலை .


உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் அச்னேராவின் ராய்புரா அஹிர் பகுதியில் சரிதா என்ற நர்ஸும், தீரஜ் என்ற ஒரு டாக்டரும் வசித்து வந்தார்கள் .அவர்கள் தங்களோடு மேலும் சில டாக்டர்களை கூட்டாக சேர்த்து
கொண்டு , டிரான்ஸ் யமுனா காலனியில் அந்த செவிலியர் வீட்டில் சிறிய அல்ட்ராசவுண்ட் இயந்திரங்களைப் பயன்படுத்தி பாலியல் நிர்ணயிக்கும் மோசடியை நடத்தினார்கள் .அப்போது அவர்கள் சில தரகர்கள் மூலம் கர்ப்பிணி பெண்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் வயிற்றில் வளர்வது ஆணா ,பெண்ணா என்று அந்த அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் பரிசோதனை செய்து கூறுவார்கள் .இதற்கு கட்டணமாக 10000 ரூபாய் வரை வசூல் செய்தார்கள் .இப்படி அவர்கள் மாதம் 100 பேருக்கு மேல் பரிசோதனை செய்து .மாதம் இரண்டு லட்சத்திற்கு மேல் சம்பாதித்து வந்தனர் .
இந்த நூதன மோசடி பற்றி கேள்விப்பட்ட போலீசார் அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடினார்கள் .அப்போது கடந்த வாரம் அந்த கூட்டத்தை கையும் களவுமாக பிடித்தார்கள்
போலீஸ் ரெய்டில் அச்சினேராவில் வசித்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர், அவர்களிடமிருந்து மூன்று சிறிய அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள், இரண்டு கார்கள் மற்றும் பிற பொருட்களை அவர்களிடம் இருந்து மீட்டனர்.நர்ஸ் சரிதாவிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள போனை பறிமுதல் செய்தனர் .
இந்த கூட்டத்தின் மூளையாக செயல்பட்ட டாக்டர் ராஜீவ் குமார், பங்கஜ் குமார் மற்றும் தீரஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.அவர்களை போலீசார் தேடி வருகின்றனர் .

மாசமான பெண்களை குறி வைத்தார் -மாசம் ரெண்டு லட்சம் குவித்தார் -ஒரு டாக்டர் செய்த டகால்டி வேலை .