தஞ்சாவூர்: 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கோரி எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

 

தஞ்சாவூர்: 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கோரி எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநரை கண்டித்து, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்: 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கோரி எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

பட்டுகோட்டை தலைமை அஞ்சலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரியும், அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைதுசெய்தனர்.

தஞ்சாவூர்: 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கோரி எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்