ஈரோடு: “7.5% இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றியது அதிமுக அரசுதான்” – செங்கோட்டையன்
Oct 27, 2020, 15:19 IST1603792178000
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க முயற்சி மேற்கொண்டு, அதற்கான சட்டம் இயற்றியது அதிமுக அரசுதான் என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் இன்று 7.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்புவதாகவும், ஆனால் அவர்கள் யாரும் இடஒதுக்கீடு கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இடஒதுக்கீட்டுக்கான முயற்சியை மேற்கொண்டு சட்டம் இயற்றியது அதிமுக அரசுதான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாக கூறிய அவர், இந்த விவகாரம் குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரும் என்று அவர் கூறினார்.