7.5% உள்ஒதுக்கீடு: கூடுதல் இடங்களுக்கு உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்!

 

7.5% உள்ஒதுக்கீடு: கூடுதல் இடங்களுக்கு உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்!

தமிழக அரசு கொண்டு வந்த 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. உள் ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சீட் பெறும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவ இடங்கள் கிடைக்கவில்லை என தனியார் பள்ளி மாணவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

7.5% உள்ஒதுக்கீடு: கூடுதல் இடங்களுக்கு உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்!

இந்த நிலையில், மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன்தேதியிட்டு அமல் படுத்த கோரியும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்கள் கோரியும் கடலூரைச் சேர்ந்த மாணவிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உள் ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காத மாணவர்கள் கூடுதல் இடங்களுக்கு உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூடுதல் மருத்துவ இடங்களை ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

7.5% உள்ஒதுக்கீடு: கூடுதல் இடங்களுக்கு உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்!

இதனையடுத்து அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 227 இடங்களில் 26 இடங்கள் உள் ஒதுக்கீட்டின் கீழ் வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.