7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை!
திருச்சி அருகே 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திவேல்(50) என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி அருகே 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திவேல்(50) என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஜா பேட்டையை சேர்ந்த பாபா (எ)சக்திவேல் அதே பகுதியில் கோலமாவு வியாபாரம் செய்துவருகிறார். அவர் அப்பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகாரின் அடிப்படையில் கடந்த 07.08.2018 அன்று கோட்டை மகளிர் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி வனிதா, சிறுவனுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சக்திவேலுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.