7 பேரை ராகுல் காந்தி மன்னித்துவிட்டார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

 

7 பேரை ராகுல் காந்தி மன்னித்துவிட்டார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை ராகுல் காந்தி மன்னித்துவிட்டார் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து அவர்களை விடுவிப்பது குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவை இன்று கூட இருக்கிறது. 

இந்நிலையில், 7 பேரை விடுவிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் 7பேரை ராகுல் காந்தி மன்னித்துவிட்டர். அவர்களை விடுவிப்பதில் காங்கிரஸுக்கு ஆட்சேபம் இல்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு எதை செய்ய வேண்டுமோ அதை செய்யட்டும் என கூறியுள்ளார்.

#rajivgandhi #rajivgandhimurder #perarivalan #rajivgandhicase