7 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பாவான  மிர்ச்சி சிவா! 

 

7 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பாவான  மிர்ச்சி சிவா! 

7 ஆண்டுகளுக்கு பிறகு மிர்ச்சி சிவா மற்றும் பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை: 7 ஆண்டுகளுக்கு பிறகு மிர்ச்சி சிவா மற்றும் பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மிர்ச்சி சிவா. அதன் பிறகு சரோஜா, தமிழ்ப்படம், கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்கள் சரியாக கைகொடுக்கவில்லை. 

இவருக்கும், தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனை பிரியா என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கிட்ட தட்ட 7 ஆண்டுகள் கழித்து இந்த தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தைக்கு ‘அகஸ்தியா’ என பெயர் சூட்டியுள்ளனர்.

siva

தாயும், சேயும் நலமுடன் இருப்பதாகச் சிவாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதையொட்டி இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.