ஒரே கத்தியால் 6 பேர் சேர்ந்து ஒருவரை குத்தி கொலை செய்த ஆத்திரம்

 

ஒரே கத்தியால் 6 பேர் சேர்ந்து ஒருவரை குத்தி கொலை செய்த ஆத்திரம்

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் கள்ளக்காதலன் வழக்கறிஞர் வெங்கடேசனுடன் இளம்பெண் சத்தியா(30) கடந்த வாரம் தான் குடியேறினார். அதற்குள் தேடிப்பிடித்து உறவினர்கள் ஆறு பேர் சேர்ந்து ஒரே கத்தியால் வெங்கடேசனை குத்தி கொலை செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் சத்யா.

ஒரே கத்தியால் 6 பேர் சேர்ந்து ஒருவரை குத்தி கொலை செய்த ஆத்திரம்

சென்னை கோயம்பேடு அருகே மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் சங்கர் மகள் சத்யா. வெங்கடேசன் என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கணவர் வெங்கடேசன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

பிரிந்து வாழ்ந்து வரும் சத்தியாவுக்கு வெள்ளேரிதாங்கள் வழக்கறிஞர் வெங்கடேசன் உடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. தன்மகள் சத்தியா மூன்று மகள்கள் இருக்கும்போது வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை அறிந்த பெற்றோர் சத்தியாவை அழைத்து இது சரிப்பட்டு வராது என்று பலமுறை கண்டித்துள்ளனர். அப்படி இருந்தும் சக்தியா வழக்கறிஞர்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளார்.

ஒரே கத்தியால் 6 பேர் சேர்ந்து ஒருவரை குத்தி கொலை செய்த ஆத்திரம்

இந்த நிலையில் யாருடைய தொந்தரவும் இல்லாமல் தனியாக வாழ நினைத்த சத்தியா, காக்கலூரில் வீடு வாடகைக்கு பிடித்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தான் குடியேறியுள்ளார். அங்கு சத்யாவை பார்க்க வழக்கறிஞர் வெங்கடேசன் அடிக்கடி வந்து போயுள்ளார். அப்படித்தான் அன்றைக்கும் சத்தியா வீட்டிற்கு வந்து வெங்கடேசன் உள்ளே இருந்துள்ளார்.

அப்போது சத்யாவை மிரட்டி கணவருடன் சேர்த்து வைப்பதற்காக ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு சத்யாவின் தந்தை சங்கர், தாயார் சின்னம்மா, தங்கை சங்கீதா, சகோதரர் வினோத், சங்கீதாவின் கணவர், சத்யாவின் சித்தி தேவி ஆகிய 6 பேரும் காக்களூர் சென்றுள்ளனர். அப்போது திடீரென்று அவர்கள் சத்யா வீட்டிற்கு சென்றதால், உள்ளே இருந்த வழக்கறிஞர் வெங்கடேசன் எஸ்கேப் ஆக முடியவில்லை.

ஒரே கத்தியால் 6 பேர் சேர்ந்து ஒருவரை குத்தி கொலை செய்த ஆத்திரம்

இதனால் இத்தனை சொல்லியும் கேளாமல் தனி வீடு எடுத்து தங்கியிருந்த சக்தியா மீது ஆத்திரம் வந்திருக்கிறது உறவினர்களுக்கு. வழக்கறிஞர் வெங்கடேசன்தான் இத்தனைக்கும் காரணம் என்பதால் அவரை ஆத்திரத்தில் கத்தியால் குத்தியிருக்கிறார் சங்கர். அடுத்து அதே கத்தியை பிடுங்கி தாயார் சின்னம்மா, தங்கை சங்கீதா, சகோதரர் வினோத் , சங்கீதாவின் கணவர், சத்யாவின் சித்தி தேவி என ஆறு பேரும் மாறி மாறி ஒரே கத்தியை பிடுங்கி பிடுங்கி வழக்கறிஞர் வெங்கடேசனை ஆத்திரம் தீர குத்தியுள்ளனர்.

இதில் அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து வெங்கடேசன் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து மகளும் இறந்துவிட்டதாக நினைத்த உறவினர்கள் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் வெங்கடேசனை கத்தியால் குத்திய போது எழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மிரண்டுபோய் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஒரே கத்தியால் 6 பேர் சேர்ந்து ஒருவரை குத்தி கொலை செய்த ஆத்திரம்

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் 6 பேரும் தலைமறைவாகி விட்டார்கள். போலீசார் ஜன்னல் வழியாக பார்த்தபோது சத்தியா அரைமயக்கத்தில் முனகிக் கொண்டு இருந்துள்ளார். வெங்கடேசன் உயிரிழந்து கிடந்துள்ளார். பின்னர் பூட்டை உடைத்து வெங்கடேசன் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சத்தியாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தலைமறைவான 6 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.