ஒர்க் ஷாப்பில் மின்சாரம் தாக்கியதில், 6ஆம் வகுப்பு மாணவி பலி

 

ஒர்க் ஷாப்பில் மின்சாரம் தாக்கியதில், 6ஆம் வகுப்பு மாணவி பலி

கோயமுத்தூர்

கோவையில் ஒர்க்‌ ஷாப்பில் மின்சாரம் தாக்கியதில், 6ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை சிங்காநல்லூர் என்.ஆர்.மணி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் திருமன். இவர் அதே பகுதியில் வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவரது மகள் மகாலெட்சுமி(12). தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில, நேற்று திருமன், தனது மனைவி மற்றும் மகள் ஆகியோரை ஒர்க்‌ஷாப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சிறுமி அங்கிருந்த இயந்திரத்தை தொட்டபோது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்ட சிறுமி மயக்கமடைந்தார்.

ஒர்க் ஷாப்பில் மின்சாரம் தாக்கியதில், 6ஆம் வகுப்பு மாணவி பலி

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.