இந்து முன்னணி பிரமுகர் பிஜூ கொலையில் 6 மீது குண்டாஸ் பாய்ந்தது

 

இந்து முன்னணி பிரமுகர் பிஜூ கொலையில் 6 மீது குண்டாஸ் பாய்ந்தது

கோவை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் 6 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தை சேர்ந்த பிஜூ(37), சோடா கடை நடத்தி வந்த இந்து முன்னணி பிரமகரான இவரை கடந்த மாதம் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக்கொன்றது. முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்தது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் 6 பேரை கைது செய்த காட்டூர் போலீசார், விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

இக்கொலை வழக்கில் ஆறுமுகம் என்பவர் சிவகங்கை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்துவிட்டு மீண்டும் சிறையில் அடைத்தனர். அடுத்து சின்னவேடம்பட்டியை சேர்ந்த கோபால்(28) என்பவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 6 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை சிறையில் உள்ள 6 பேரிடம் போலீசார் வழங்கி இருக்கின்றனர்.