நிஷா வெளியேற்றம்… அர்ச்சனாவின் அழுகையும் அனிதாவின் வெற்றி சிரிப்பும்! – பிக்பாஸ்4

 

நிஷா வெளியேற்றம்… அர்ச்சனாவின் அழுகையும் அனிதாவின் வெற்றி சிரிப்பும்! – பிக்பாஸ்4

‘கூட்டம் அதிகமா இருக்கு… அதனால கூண்டோட அனுப்புவாங்க’ என அனிதா முதன்நாள் சொன்னது உண்மைதான். இந்த வாரம் இரண்டு எவிஷன் கொடுத்து பலருக்கும் அதிர்ச்சி அளித்தார் கமல். அதுவும் நிஷா வெளியேறுவார் என வெள்ளிக்கிழமை வரை நினைத்திருக்க மாட்டார்கள். நிஷா வெளியேறினாரா… வெளியேற்றப்பட்டரா என்பதைக் கட்டுரையில் பார்ப்போம்.

பிக்பாஸ் 68-ம் நாள்

நிஷா ஜெயிலில் உட்கார்ந்திருந்தார். எப்படியும் ஓரிரு மணி நேரத்தில் அழைக்கப்படுவோம் என்பது தெரிந்ததுதான். அவரிடம் ரமேஷ் எவிக்‌ஷன் செய்தியைச் சொன்னார் அர்ச்சனா. அடுத்து நான் தான் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

இன்னொரு பக்கம், தன் ஸ்டேட்டர்ஜி வேலை செய்ய ஆரம்பித்த சந்தோஷத்திலும், கமல் தனக்கு வாதாடிய மகிழ்ச்சியிலும் அனிதா உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார் தன் சகாக்களோடு. ‘அர்ச்சனா தவறுகளை யாரும் தைரியமாகச் சொல்ல மாட்டேங்குகிறாங்க’ என்று அனிதா சொல்வதன் மூலம், அவரின் அடுத்த குறி அர்ச்சனா தான் போல.

பிக்பாஸ் 69 –ம் நாள்

நிஷா வெளியேற்றம்… அர்ச்சனாவின் அழுகையும் அனிதாவின் வெற்றி சிரிப்பும்! – பிக்பாஸ்4

கமல் பிக்பாஸின் 70 –ம் நாள் என்று சொன்னாலும் வரிசைப்படி 69-ம் நாள் தான். இந்தக் குழப்பத்தை 50-ம் நாளிலேயே பேசினோம்.

ரோபோ விளையாட்டில் எதிர் அணிக்கு ஆதரவாக யார் விளையாடினா? என்று கமல் கேட்டதும், ஆரி சொன்ன பெயர் ரியோ. கேபியிடம் பேசியதை வைத்து சொன்னார்.  ஆனால், கேபியை ‘நீ சரியான போட்டியாளரே இல்ல… இல்ல’னு ஆரி குத்திக்கொண்டே இருந்ததால் கேபி அங்கே போய் அழுதார். அதற்காக ரியோ சொன்ன ஆறுதல் வார்த்தைகளே அவை. ஆனால், அது சபைக்கு வரும்போது அதைத் தெளிவாக எடுத்துச் சொல்ல தெரியவில்லை ரியோவுக்கு. அனிதாவுடன் சண்டையுடும் போதும் இதேதான். ஹீரோ அது இது என தனிப்பட்ட முறையில் டேமேஜ் செய்து கால் செண்டர் டாஸ்க்கில் பேசியதை எங்குமே அவர் குறையாகப் பதிவு செய்யவே இல்லை. இதை ஆரி, அனிதா அண்ட் கோ பிடித்துக்கொண்டது.

ரமேஷ் எவிஷன் ஏன் என்று கேள்வியை மாற்றினார் கமல். கிட்டத்தட்ட பலரும் தாங்கள் எதிர்பார்த்ததாகச் சொன்னார்கள் ரியோ தவிர. அனிதா மட்டும், அர்ச்சனாவின் ஓவர் ஷேடோவில் ரமேஷ் இருந்ததால் வெளியேற்றப்பட்டார் என்று இடித்தார்.

அனிதாவை நன்கு உசுப்பேத்தி விடுகிறார் கமல். அது அவருக்கு ஓவர் கான்பிடன்ஸ் கொடுத்து இந்த வாரம் பல பஞ்சாயத்துகளைக் கொண்டு வந்து சேர்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நிஷா வெளியேற்றம்… அர்ச்சனாவின் அழுகையும் அனிதாவின் வெற்றி சிரிப்பும்! – பிக்பாஸ்4

70 நாளாகியும் முகமூடியோடு இருப்பவர்கள் யார் என்ற கேள்விக்கு ரம்யா ரியோவையும், ரியோ நிஷாவையும், ஆரி – நிஷா, ரியோ, அர்ச்சனா ஆகியோரையும் சொன்னார்கள்.

விளையாட்டை இன்னும் சுவாரஸ்யப்படுத்த, ஃபைனல் லிஸ்ட்டில் லாஸ்ட் 2 பேர் யார் இருக்க மாட்டார்கள் என நினைக்கிறீர்கள்… எனக் கேட்டு கொக்கிப் போட்டார். இதில் நிச்சயம் ஒரு சண்டை எழும்பலாம்.

அதிகம் பேர் அர்ச்சனா, நிஷா, கேபி, சோம்ஸ், ஷிவானி, அனிதாவைச் சொன்னார்கள். நிஷாவுக்கு கேம் புரியல என்று ரியோ சொன்னபோது, ‘இங்கேயும் அப்படிதாங்க.. புரியல.. புரியலன்னு சொல்றாங்க என பன்ச் டயலாக்குக்கு ட்ரை பண்ணினார். டைமிங் ஓகே. ஆனா, விஷயம் சரியாகப் பொருந்தததால் க்ளிக்காக வில்லை.

பாலா, ஆஜித், ரம்யா ஆகியோரை ஒருவரும் சொல்ல வில்லை. அதனால், ஃபைனலில் இருப்பார்கள் என்று அர்த்தமா என்று கேட்டு இன்னும் கொஞ்சம் கொளுத்திப் போட்டார். ஆஜித் தன்னையே நாமினேட் செய்யும்போது சரி என்று ஒத்துக்கொண்ட கமல், அர்ச்சனா அப்படிச் செய்யும்போது வேற ஆள் சொல்லுங்க என்று வற்புறுத்தினார். எனக்கு என்னவோ, பிக்பாஸ் இயக்குநர் அல்லது இயக்குநர் டீம்க்கு அர்ச்சனா அண்ட் கோவை பிடிக்க வில்லை. அதன் வெளிபாடுகள் தெரிந்துவிட்டது.

நிஷா வெளியேற்றம்… அர்ச்சனாவின் அழுகையும் அனிதாவின் வெற்றி சிரிப்பும்! – பிக்பாஸ்4

ரம்யாவை, கேபியை, சோம்ஸை எவிக்‌ஷனலிருந்து காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவிக்க நிம்மதியானார்கள். இதில் ரம்யா மட்டுமே முழு நம்பிக்கையோடு தான் காப்பாற்றப்படுவோம் என்று இருந்தார்.

நேற்றைய எப்பிசோட்டில் அர்ச்சனாவைப் பற்றி ஷிவானி சொல்லும்போது, அர்ச்சனாவை விட அவரிடம் அன்பை பெற நினைப்பவர்கள்தான் விக்டிம் என்றார். அப்படியெனில், எவிக்‌ஷனில் வெளியே போய்விடுவோமா என்ற கவலையில் ஒரு மடி தேடி ஓடியது அவரிடம்தானே ஷிவானி. ஏன் பாலாவிடமே பேசி உங்கள் துயரை சரி செய்ய முடியவில்லை. இந்த இடம் முக்கியம் என நினைக்கிறேன். அர்ச்சனாவின் அன்பை கேலி செய்பவர்கள். ஷிவானியைப் போல. அழுவதற்கான மடி தேவைபட்டதும் கேலி செய்ததை மறந்து சோகத்தை இறக்கி வைப்பார்கள். ஆனால், திரும்பவும் கேலி செய்வார்கள் என்பதை நேற்று எப்பிசோட் காட்டியது.

முதன்நாளே நிஷா எவிக்‌ஷன் செய்தி கசிந்துவிட்டதால், அவர் வெளியேற்றப்பட்டது நேற்று ஆச்சர்யமாக இல்லை. அவரும் எதிர்பார்த்தது என்பதால், பெரியளவு கண்ணீர் இல்லாது வெளியேறினார். ஆனால், அர்ச்சனாவால் தாங்க முடியவில்லை. ரியோ கட்டுப்படுத்திக்கொண்டார்.

நிஷா வெளியேற்றம்… அர்ச்சனாவின் அழுகையும் அனிதாவின் வெற்றி சிரிப்பும்! – பிக்பாஸ்4

வெளியே வந்த நிஷா, கமலிடம் பிள்ளையைப் பார்க்க போகும் மகிழ்ச்சியைச் சொன்னார். வீட்டுக்குள் குறைந்த நேரமே பேச எடுத்துக்கொண்டார். மலேசியா நிஷாவை காணவில்லை என்று நூற்றியெட்டாவது முறையாக கமல் சொன்னார். ஆமாம் என்று நூற்றி ஐம்பதாவது முறையாக ஒத்துக்கொண்டார்.

வீட்டுக்குள் நிஷா அளவுக்குக்கூட கண்டண்ட் கொடுக்காத ஆட்கள் ஷிவானி, கேபி, சோம்ஸ் என வரிசைக்கட்டி நிற்கிறார்கள். ஆனால், அவர்கள் காப்பாற்றப்பட்டு நிஷா வெளியேற்றப்பட்டது சோகமே!

கமல் நேற்றைய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திய புத்தகம், ஜி.நாகராஜன் எழுதிய ’நாளை மற்றொரு நாளே’ நிஜமாகவே ரொம்ப நல்ல புத்தகம். பலரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமும்கூட.