கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

 

கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் லட்ச கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,435 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 132 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கொரோனாவில் இருந்து 45,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் 2ஆம் இடத்தில் இருக்கும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,400ஐ கடந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை கே.எம்.சியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி உயிரிழந்த்துள்ளார். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இந்த மூதாட்டிக்கு கடந்த 18 ஆம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். அந்த மூதாட்டிக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.