ஈரோடு: ரூ.67 லட்சம் மதிப்பிலான பூங்கா, அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு

 

ஈரோடு: ரூ.67 லட்சம் மதிப்பிலான பூங்கா, அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது.

ஈரோடு: ரூ.67 லட்சம் மதிப்பிலான பூங்கா, அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குமலன்குட்டை கணபதி நகரில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்காவும், கருங்கல்பாளையம் கல்லுபிள்ளையார் கோவில் வீதியில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 அங்கன்வாடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதனையொட்டி, ஈரோட்டில் இன்று நடைபெற்ற விழாவில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம் மற்றும் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு, புதிய கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.