ஒருவரை ஒருவர் காப்பாற்றும் முயற்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

 

ஒருவரை ஒருவர் காப்பாற்றும் முயற்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒருவரை ஒருவர் காப்பாற்றும் முயற்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தின் பிஜாவரில் வசித்து லக்‌ஷ்மண் அஹிர்வார், நேற்று காலையில் வீட்டின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தார். தொட்டிக்குள்ள போதுமான வெளிச்சம் இல்லாததால், மின்சார லைட்டை பிடித்துக்கொண்டே அதன் வெளிச்சத்தில் சுத்தம் செய்தார்.

அப்போது திடீரென மின்சாரம் அவரை தாக்கியது. அப்போது எழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்து ஒருவர் காப்பாற்ற பிடித்து இழுத்திருக்கிறார். இப்படியாக குடும்பத்தில் இருந்த 6 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஓடிவந்து பிடித்து இழுத்திருக்கிறார்கள். கடைசியில் 6 பேரும் பரிதாபமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேந்த 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.