“பசியோடு வந்திருக்கேன் ,பசியை தீர்த்து வை ” -மறுத்த மனைவிக்கு நேர்ந்த நிலை.

 

“பசியோடு வந்திருக்கேன் ,பசியை தீர்த்து வை ” -மறுத்த மனைவிக்கு நேர்ந்த நிலை.

கணவனுக்கு சமைத்து போடாத மனைவியை அவரின் உறவினர்களோடு சேர்ந்து கொன்றதால் அனைவரையும் போலீசார் கைது செய்தார்கள்

“பசியோடு வந்திருக்கேன் ,பசியை தீர்த்து வை ” -மறுத்த மனைவிக்கு நேர்ந்த நிலை.


உத்தரபிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் ஜுன்னிலால் பிரஜாபதி என்பவர் அவரின் இரண்டாவது மனைவி பாஸ்கலி தேவி என்பவருடன் வசித்து வந்தார் .அவருக்கு முதல் மனைவி மூலம் பிறந்த விஜய் குமார் பிரஜாபதி என்ற மகனும் அவரோடு வசிக்கிறார் .
ஜன்னிலால் பிரஜாபதியின் உறவினர்கள் அஜய் பிரஜாபதி, பிரதீப் குமார் பிரஜாபதி ஆகியோரும் அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து போவார்கள் .இந்நிலையில் ஜூன்னிலாலுக்கும் அவரின் மனைவி பாஸ்கலி தேவிக்கும் அடிக்கடி குடும்பத்தில் சண்டை வருவது வழக்கமான ஒன்றாகும் .அப்போதெல்லாம் அவர்கள் சண்டை போட்டுவிட்டு பின்னர் சமாதானமாகி விடுவார்கள் .
கடந்த ஜனவரி 27ம் தேதியன்று இதேபோல் கணவன் மனைவிக்குள் மீண்டும் சண்டை வந்துள்ளது .அப்போது வெளியே போய்விட்டார் ஜன்னிலால் .பின்னர் தன்னுடைய உறவினர்கள் மற்றும் மகனோடு வீட்டிற்கு வந்தார் ஜூன்னிலால் .அப்போது அவர் மிகுந்த பசியோடு இருந்தார் .அதனால் மனைவியிடம் சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்டார் .அப்போது அந்த மனைவி பாஸ்கலி சதேவி ‘தான் இன்று சமைக்கவில்லை’ என்று கூறினார் .அதனால் கோபப்பட்ட ஜூன்னிலால் தன்னுடைய உறவினர்களோடு சேர்ந்து அந்த பெண்ணை அடித்து கொலை செய்துள்ளார். .அதன் பிறகு அவரின் உடலை அங்குள்ள ஒரு கால்வாயில் கொண்டு போய் வீசியுள்ளார்கள் .மறுநாள் அந்த பெண்னின் இறந்த உடலை பார்த்த பொது மக்கள் போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அந்த பெண்ணை கொன்ற அவரின் கணவர் ,மகன் மற்றும் உறவினர்கள் அஜய் பிரஜாபதி, பிரதீப் குமார் பிரஜாபதி ஆகிய நால்வரையும் கைது செய்தார்கள் .

“பசியோடு வந்திருக்கேன் ,பசியை தீர்த்து வை ” -மறுத்த மனைவிக்கு நேர்ந்த நிலை.