ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து, முதியவர் பலி!

 

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து, முதியவர் பலி!

திருவாரூர்

திருவாரூர் அருகே ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த மரக்கடை பகுதியை சேர்ந்தவர் மீரா உசேன் (55). இவர் நேற்று முன்தினம் மன்னார்குடியில் பணிபுரியும் தனது மகனுக்கு மதிய உணவு கொடுப்பதற்காக, கூத்தாநல்லூரில் இருந்து பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அமர இடம் கிடைக்காத நிலையில் படியின் அருகே நின்றபடி பயணம் செய்த கொண்டிருந்தார்.

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து, முதியவர் பலி!

இந்த நிலையில், கோரையாறு புதுப்பாலம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து மீரா உசேன் தவறி கீழே விழுந்தார். இதில் பாலத்தில் மோதி தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கூத்தாநல்லூர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் ராஜ்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.