கள்ளக்குறிச்சியில் இடி தாக்கியதில் 65 ஆடுகள் உடல்கருகி இறந்தன!

 

கள்ளக்குறிச்சியில் இடி தாக்கியதில் 65 ஆடுகள் உடல்கருகி இறந்தன!

உளுந்தூர்பேட்டையில் இடி தாக்கியதில் ராமச்சந்திரன் என்பவரின் 65 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் இடி தாக்கியதில் 65 ஆடுகள் உடல்கருகி இறந்தன!

கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை ஊ.செல்லூரில் ராமச்சந்திரன் 60ற்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ராமச்சந்திரன் ஆட்டுக் கொட்டகையில் தனது ஆடுகளைக் கட்டி வைத்து விட்டு உறங்கச் சென்றுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் இடி தாக்கியதில் 65 ஆடுகள் உடல்கருகி இறந்தன!

இந்நிலையில் கிராமத்தில் விடிய விடியப் பெய்த மழையின் போது இடி தாக்கியதில் 65 ஆடுகள் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஆடுகளை நம்பி தனது வாழ்வாதாரம் இருந்து வந்த நிலையில் மின்னல் தாக்கி மொத்தமும் இறந்தது ராமச்சந்திரன் குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.