“உடலை கொடுத்தால் கடனை கொடுப்பேன்” -பெண்ணிடம் பேரம் பேசிய கடை முதலாளி

 

“உடலை கொடுத்தால் கடனை கொடுப்பேன்” -பெண்ணிடம் பேரம் பேசிய கடை முதலாளி

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அந்தேரி பகுதியில் ஒரு 64 வயதான நபர் துணிக்கடை நடத்தி வருகிறார் .அவரின் கடையில் வேலைக்கு வரும் பெண்களிடம் அவர் பாலியல் கொடுமைகள் செய்வதாக புகார் வந்தது .


சில மாதங்களுக்கு முன்பு ஒரு 40 வயதான அவருக்கு தெரிந்த பெண், அவரின் கடைக்கு அவரை பார்க்க வந்துள்ளார் .அப்போது அவரிடம் தன்னுடைய கடையில் வேலைக்கு சேர்ந்து தன்னையும் கவனித்துக்கொண்டால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அவருக்கு தருவதாக கூறினார் .ஏனெனில் தனக்கு இன்னும் திருமணமாகவில்லை ,குழந்தையும் இல்லை என்று கூறி அவருக்கு ஆசை வார்த்தைகள் கூறினார் .மேலும் இதற்கு முன்பு ஒரு பெண் தனனுடைய கடையில் வேலை பார்க்கும் போது தன்னை இப்படி கவனித்துக்கொண்டதாகவும் அவருக்கு தான் நிறைய பணம் கொடுத்ததாகவும் கூரியுள்ளார் .அதையெல்லாம் உண்மையென நம்பிய அந்த பெண் அவரின் கடைக்கு வேலைக்கு வந்துள்ளார் .
பின்னர் சில நாள் கழித்து அவருக்கு வீடு வாங்கி தருவதாக அவர் ஆசை காமித்தார் .அதனால் தன்னிடம் இருக்கும் பணத்தை கொடு மீதி பணத்தை தான் போட்டு வாங்கி கொடுப்பதாக கூறினார் .அதை நம்பிய அந்த பெண் 21 லட்ச ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார் .ஆனால் அவர் எந்த வீடும் வாங்கிக்கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார் .அதனால் அவரிடம் அந்த பெண் பணத்தை கேட்டபோது அவரை உறவுக்கு அழைத்துள்ளார் .அதனால் அந்த பெண் போலீசில் அவர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

“உடலை கொடுத்தால் கடனை கொடுப்பேன்” -பெண்ணிடம் பேரம் பேசிய கடை முதலாளி