ஐ.டி நிறுவன ஊழியர் வீட்டில் 63 சவரன் நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை!

 

ஐ.டி நிறுவன ஊழியர் வீட்டில் 63 சவரன் நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை!

கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே ஐ.டி நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 63 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சித்தனப்பள்ளி சக்திநகரை சேர்ந்தவர் சீனிவாசன் (34). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவிட்டதால், சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு ஆந்திராவில் உள்ள சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். இதனால் கடந்த 4 மாதங்களாக வீட்டி பூட்டிக் கிடந்துள்ளது.

ஐ.டி நிறுவன ஊழியர் வீட்டில் 63 சவரன் நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை!

இதனை அறிந்த மர்ம நபர்கள் சிலர், சீனிவாசனின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 63 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அருகில் இருந்தவர்கள் சீனிவாசனுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், நேற்று சீனிவாசன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவை உடைத்து பணம், நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து, சீனிவாசன் ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கெள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.