புதுக்கோட்டையில் கொரோனாவால் 62 வயது பெண் பரிதாப பலி!

 

புதுக்கோட்டையில் கொரோனாவால் 62 வயது பெண் பரிதாப பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,329 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது.

புதுக்கோட்டையில் கொரோனாவால் 62 வயது பெண் பரிதாப பலி!

நேற்று மட்டும் 64 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 42 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் கொரோனாவால் 62 வயது பெண் பரிதாப பலி!

இந்நிலையில் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பால் கடியாபட்டியை சேர்ந்த 62 வயது பெண்மணி அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் அம்மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதுவரை பதுக்கோட்டையில் 252 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 79 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.