62வயதான பெண்ணை பலாத்காரம் செய்து 25 முறை கத்தியால் குத்தி.. வெறிபிடித்த இளைஞன் சிக்கினான்

 

62வயதான பெண்ணை பலாத்காரம்  செய்து 25 முறை கத்தியால் குத்தி.. வெறிபிடித்த இளைஞன் சிக்கினான்

62 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அல்லாமல் 25 முறையால் கத்தியால் குத்தி, கழுத்தையும் அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளான் வெறிபிடித்த இளைஞன்.

62வயதான பெண்ணை பலாத்காரம்  செய்து 25 முறை கத்தியால் குத்தி.. வெறிபிடித்த இளைஞன் சிக்கினான்

பீகாரை சேர்ந்த 62 வயதான பெண், மகன் மற்றும் பேரனுடன் டெல்லி டலுபுராவில் வசித்து வந்தார். அதே பகுதியில் தள்ளுவணியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். மகன் நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காய்கறி வியாபாரம் செய்ய சென்றபோது, பேரனும் உடன் சென்றிருக்கிறார். காய்கறி வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்று சமைத்து சாப்பிட வேண்டும் என்பதற்காக பேரனுடன் வேக வேகமாக வந்திருக்கிறார்.

62வயதான பெண்ணை பலாத்காரம்  செய்து 25 முறை கத்தியால் குத்தி.. வெறிபிடித்த இளைஞன் சிக்கினான்

அப்போது பின் தொடர்ந்து வந்த 30 வயதுடைய இளைஞன், அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். அப்பெண் தடுக்க முயன்றும் பலவந்தமாக அப்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான். இந்த கொடுமை போதாது என்று, 25 முறை அப்பெண்ணை கத்தியால் குத்தியுள்ளான். கழுத்தையும் அறுத்து கொலை செய்துள்ளான்.

வேலை முடித்துவிட்டு வந்த மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைக்கண்டு கதறி அழுதவர், எப்படியும் காப்பாற்றி விடலாம் என்று மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடியிருக்கிறார். அப்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக சொல்லி உள்ளனர். மேலும், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

62வயதான பெண்ணை பலாத்காரம்  செய்து 25 முறை கத்தியால் குத்தி.. வெறிபிடித்த இளைஞன் சிக்கினான்

போலீசார் விரைந்து வந்து வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அப்பெண்ணின் வீட்டருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த கொலை வெறி பிடித்த இளைஞன் சிக்கினான்.

சம்பவம் நடந்த அன்று தான் மதுபோதையில் இருந்ததாக தெரிவித்துள்ளான்.