மகாராஷ்டிராவில் இருந்து 6,180 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூருக்கு வருகை

 

மகாராஷ்டிராவில் இருந்து 6,180 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூருக்கு வருகை

திருப்பத்தூர்

2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து சுமார் 6 ஆயிரத்து 180 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று திருப்பத்தூருக்கு கொண்டுவரப்பட்டன. பீட் மற்றும் சோலாப்பூர் மாவட்டங்களில் இருந்து 4 லாரிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் இருந்து 6,180 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூருக்கு வருகை

இதனை அடுத்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில், அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க குடோனில் வைக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்கு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.