கொரோனா வைரசை 60 நாட்கள் மட்டுமே தடுக்கும் ஆண்டிபாடி!

 

கொரோனா வைரசை 60 நாட்கள் மட்டுமே  தடுக்கும் ஆண்டிபாடி!

கொரோனா வைரசை அழிக்க வந்திருக்கும் தடுப்பூசி எத்தனை நாளைக்கு நம் உடலில் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்ற ஆய்வில் 60 முதல் 70 நாளைக்கு வைரஸ் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்று தெரியவந்துள்ளது.
பொதுவாக உடலில் வைரஸ் தாக்கும்போது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி காரணமாக ஆண்டி ஜென் உருவாகிறது. அப்படி உருவாகும் ஆண்டி பாடியானது நமது வாழ்நாள் முழுவதும் உடலிலேயே இருக்கும். மீண்டும் அதே வைரஸ் உடலில் நுழைய விடாதபடி இந்த ஆண்டிபாடிக்கள் தடுத்துவிடும். ஆனால், கொரோனா வைரஸின் ஆண்டிபாடிகள் வாழ்நாள் முழுவதும் இல்லாத நிலை உள்ளது.


ஒருமுறை தாக்கிய கொரோனா வைரஸ் மீண்டும் நம் உடலுக்குள் நுழைய விடாத வகையில் ஆண்டி பாடிக்கள் தடுத்துவிட வேண்டும்.
கடந்த ஐந்து மாதங்களாக டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 780 பேரின் மாதிரிகளைக் கொண்டு இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வின் முடிவில் 60 முதல் 70 நாட்கள் வரையிலும் ஆண்டிபாடி உடலில் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஒரு முறை அம்மை வந்துவிட்டால் அதற்கு தடுப்பூசி போட்டுவிட்டால் மீண்டும் வராது. அந்த அளவுக்கு தொடர் ஆண்டிபாடியை அது தந்துவிடுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் தடுப்பூசி 60 நாட்களுக்கு மட்டுமே உடலுக்குள் ஆண்டிபாடியை தருகிறது என்றால், இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் வைரஸ் தாக்க வாய்ப்புள்ளது. ஆகவே, அம்மை வைரஸ் நோய்க்கு இருப்பதை போலவே கொரோனா வைரஸ் எதிர்க்கும் ஆண்டிபாடிகளுக்கான ஆய்வும் நடைபெற்று வருகிறது.