மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை – முதியவர் போக்சோ சட்டத்தில் கைது!

 

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை – முதியவர் போக்சோ சட்டத்தில் கைது!

தருமபுரி

தருமபுரி அருகே மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பூனையன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (60). இவர் அதே பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் மனோகரன் வழக்கம்போல் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் ஒருவர், தனது தந்தையுடன் ஆடுகளை ஓட்டி வந்துள்ளார்.

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை – முதியவர் போக்சோ சட்டத்தில் கைது!

அப்போது, ஆடுகளை மேய்க்க அழைத்துச் செல்வதாக கூறி மனநலம் பாதித்த பெண்ணை வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற மனோகரன், அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்ததால், மனோகரன் தப்பியோடி உள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட அவரது தந்தை இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மனோகரனை கைதுசெய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.