23 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய முதியவர்!

 

23 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய முதியவர்!

அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 60 வயது நபர் 23 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணின் புகாரின்படி, ஐந்து மாதங்களுக்கு முன்பு கிராமத்தின் ஒரு போர்வெல்லில் தண்ணீர் எடுக்கச்சென்றபோது பெரியவர் தன் ஆசைக்கு இணங்குமாறு தன்னை கட்டாயப்படுத்தியாகக் கூறியுள்ளார்.

“என் கிராமத்தில் ஒரு போர்வெல் அருகே துணிகளைத் துவைக்கச் சென்றிருந்தேன், கனுபாய் என்பவர் என்னை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இழுத்துச் சென்று கட்டாயப்படுத்தினான். மேலும் அதை யாரிடமும்சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளான். அதேபோல மீண்டும் என்னை 2-3 முறை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டினான்” என்று அந்தப் பெண் போலீசிடம் தெரிவித்துள்ளார்.

23 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய முதியவர்!

பின்னர் அந்த பெண்ணின் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது பெண் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தினர். அதன்பின்னர் தான் அந்தப் பெண் தனக்கு நடந்த கொடுமை பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

முதியவர் மீது பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.