பாலியல் வன்கொடுமையால் 6வயது சிறுமி உயிரிழப்பு: உத்திர பிரதேசத்தில் தொடரும் கொடூரம்!

 

பாலியல் வன்கொடுமையால் 6வயது சிறுமி உயிரிழப்பு: உத்திர பிரதேசத்தில் தொடரும் கொடூரம்!

ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உத்திர பிரதேச மாநிலம், ஹத்ராஸை சேர்ந்த 6 வயது சிறுமி அலிகாரில் தனது உறவினர்களுடன் வசித்து வந்தார். சிறுமியின் தாய் இறந்த பிறகு, அவர் அலிகார் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையில், சிறுமியின் உறவினரே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமையால் 6வயது சிறுமி உயிரிழப்பு: உத்திர பிரதேசத்தில் தொடரும் கொடூரம்!

அதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்கள், குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என சாதாபாத் – பால்தேவ் சாலையில் சிறுமியின் உடலை வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து புகார் மீது நடவடிக்கை எடுக்காத அலிகாரின் எஸ்.பி முனிராஜை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஹத்ராஸில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.