6 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது!

 

6 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது!

திண்டிவனத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

6 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது!

திண்டிவனம் பகுதியில் உள்ள 6 வயது சிறுமி ஒருவர் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். குழந்தையை உறவினர் வீட்டில் விட்டு விட்டு இருவரும் தொடர்ந்து கூலி வேலைக்கு சென்று வரும் நிலையில், நேற்று முன்தினம் குழந்தை தொடர்ந்து அழுத நிலையில் இருந்துள்ளது.

பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்ததில், திண்டிவனம் ரோசணை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொய்யாது மகன் வெங்கடேச பெருமாள்(56). என்பவர் தொடர்ந்து குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெருமாள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வெங்கடேச பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.