6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

 

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே 6 வயது சிறுமியை கடத்திச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியில் தெருவில் விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமி ஒருவர், திடீரென மாயமாகி உள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர், அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தேடி பார்த்துள்ளனர். அப்போது, அதேபகுதியை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி ராமசாமி(55) என்பவர் சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் ராமசாமியை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து, அவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு, கடத்தல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.