திருமண நிகழ்ச்சியில் வெடி விபத்து- 6 வயது சிறுவன் பரிதாப பலி!

 

திருமண நிகழ்ச்சியில் வெடி விபத்து- 6 வயது சிறுவன் பரிதாப பலி!

திருமண நிகழ்ச்சியில் வெடி விபத்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிகழ்ச்சியில் வெடி விபத்து- 6 வயது சிறுவன் பரிதாப பலி!

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ள முள்ளுகுடி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரியப்பனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் அவரது உறவினர்கள் அவருக்கு நலங்கு வைக்கும் சம்பிரதாயத்தை மேற்கொண்டுள்ளனர்.

திருமண நிகழ்ச்சியில் வெடி விபத்து- 6 வயது சிறுவன் பரிதாப பலி!

அப்போது உறவினர்கள் சீர்வரிசை கொண்டுவரும்போது கயிற்றில் வெடிகளை வரிசையாக கட்டி வைத்து கொண்டாடினர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடி வெடித்ததில் அருகில் நின்று கொண்டிருந்த செந்தில் என்பவரின் 6 வயது மகன் சக்தி மற்றும் முள்ளுக்குடி பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் பிரவீன் (6) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்தி உயிரிழக்க பிரவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெடி விற்பனை செய்த திருவாலங்காடு சின்னதுரை மற்றும் பாண்டியனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.