மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலி… அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்ததால் மக்கள் பீதி…

 

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலி… அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்ததால் மக்கள் பீதி…

மதுரை

மதுரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த உள்ளது.

மதுரை மாவட்டம் எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரது மகன் சாய் சரண்(6). சிறுவனுக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனால் பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது, அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலி… அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்ததால் மக்கள் பீதி…

இதனை அடுத்து, சிறுவன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த மாதம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த திருமலேஷ் என்பவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு சிறுவன் உயிரிழந்தது கிராமத்தினரை அச்சத்தில் மூழ்கடித்து உள்ளது.