கிருமிநாசினியை பயன்படுத்தி போலி மதுபானம் தயாரிப்பு – 6 பேர் கைது!

 

கிருமிநாசினியை பயன்படுத்தி போலி மதுபானம் தயாரிப்பு – 6 பேர் கைது!

கடலூர்

கடலூர் அருகே கிருமிநாசினை பயன்படுத்தி போலி மதுபானம் தயாரித்த கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் ஊராட்சியில், சிலர் போலி மதுபானம் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, வீடு ஒன்றில் போலி மதுபானங்கள் தயாரித்த கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

கிருமிநாசினியை பயன்படுத்தி போலி மதுபானம் தயாரிப்பு – 6 பேர் கைது!

அப்போது, அந்த கும்பல் கைகளை தூய்மை செய்ய பயன்படுத்தும் கிருமிநாசினியை பயன்படுத்தி, பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான மதுபானம் தாயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து, சுகாதாரத் துறையினர் நடத்திய ஆய்வில், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தியது ஆல்கஹால் கலந்த சானிடைசர் என்பது உறுதியானது.

இதனையடுத்து, அங்கு மதுபானம் தயாரிக்க வைத்திருந்த சுமார் 300 லிட்டர் சானிடைசர், பிரபல நிறுவனங்களின் லேபிள், மதுபானம் தயாரிக்கும் எந்திரம், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.