6 மாத குழந்தை விற்பனை – தந்தை உள்ளிட்ட மூவர் கைது

 

6 மாத குழந்தை விற்பனை – தந்தை உள்ளிட்ட மூவர் கைது

சேலம்

சேலத்தில் பிறந்து 6 மாதங்களே ஆன ஆண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த கட்டிடத் தொழிலாளி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சவுகத் அலி. இவரது மனைவி சர்மிளா. இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், சவுகத் அலி கடன் தொல்லை காரணமாக, தனது குழந்தையை அழகாபுரத்தை சேர்ந்த சுந்தரம் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சர்மிளாவின் தந்தை அலாவுதீன், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

6 மாத குழந்தை விற்பனை – தந்தை உள்ளிட்ட மூவர் கைது

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர். மேலும், குழந்தை விற்பனை தொடர்பாக சவுகத் அலி, சுந்தரம் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட சேட்டு ஆகியோரை கைதுசெய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.