தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் புகுந்த 6 அடி நீள நல்லபாம்பு மீட்பு

 

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் புகுந்த 6 அடி நீள நல்லபாம்பு மீட்பு

சென்னை

ஆவடியில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர். சென்னை ஆவடி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் கார்த்திகேயன். கனமழை காரணமாக ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில், பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், இவரது வீட்டுக்குள் கொடிய விஷமுடைய 6 அடி நீள நல்லபாம்பு ஒன்று புகுந்தது.

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் புகுந்த 6 அடி நீள நல்லபாம்பு மீட்பு

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனடியாக ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து ஆவடி தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராகவன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், படமெடுத்து ஆடிய அந்த நல்ல பாம்பை சுமார் அரைமணி நேர போராட்டத்திற்கு பின் லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து, பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட அந்த பாம்பு, பாதுகாப்பான இடத்தில் கொண்டு விடப்பட்டது. தொடர்மழையால் வீட்டிற்குள் விஷபாம்பு புகுந்த நிகழ்வு அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.