வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட போலீசார் குவிப்பு !

 

வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட போலீசார் குவிப்பு !

பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட போலீசார் குவிப்பு !

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்த 1010 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் முக்கிய சந்திப்பில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முருகன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட போலீசார் குவிப்பு !

திருத்தணிக்கு செல்லும் பாஜகவினரை கைது செய்ய 20 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கோயில் மலைக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ள தடையை மீறி பாஜக யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக யாத்திரைக்கு தடை விதித்துள்ள நிலையில் போலீசார் பாஜகவினரை கைது செய்ய முனைப்புடன் உள்ளனர்.