இடி, மின்னல் தாக்கி 6 கறவை மாடுகள் உயிரிழப்பு!

 

இடி, மின்னல் தாக்கி 6 கறவை மாடுகள் உயிரிழப்பு!

பெரம்பலூர் அருகே இடி மின்னல் தாக்கியதில் 6 கறவை மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பல மணி நேரமாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இடி, மின்னல் தாக்கி 6 கறவை மாடுகள் உயிரிழப்பு!

இந்த நிலையில், நேற்று மாலை பெய்த மழையில் இடி மின்னல் தாக்கி நொச்சியம் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் 2 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அதே போல புதுநடுவலூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் 2 மாடுகளும், கோவிந்தன் என்பவரின் ஒரு மாடும், பழனியாண்டி என்பவரின் ஒரு மாடும் அடுத்தடுத்து மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளன. உயிரிழந்த அனைத்தும் கறவை மாடுகளாம். மின்னல் தாக்கி 6 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.