தேர்தல் பகையால் பால் வியாபாரி படுகொலை- ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 6 பேர் கைது

 

தேர்தல் பகையால் பால் வியாபாரி படுகொலை- ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 6 பேர் கைது

மதுரை

பாலமேடு அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக பால் வியாபாரி வெட்டிகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்த எரம்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமணி(32). இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் பால் விநியோகம் செய்ய சென்ற பிச்சை மணியை, மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொன்று தப்பியோடினர்.

தேர்தல் பகையால் பால் வியாபாரி படுகொலை- ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 6 பேர் கைது

இந்த கொலை சம்பவம் குறித்து பாலமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் காரணமாக எரம்பட்டி திமுக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர் கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுந்தர்ராஜன் உள்ளிட்ட 6 பேரை கைதுசெய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.