போதையில் போலீஸ் வாகனம் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கிய கும்பல்…6 பேர் கைது!

 

போதையில் போலீஸ் வாகனம் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கிய கும்பல்…6 பேர் கைது!

சென்னையில் மதுபோதையில் போலீஸ் வாகனத்தை அடித்து உடைத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனி குடிசை மாற்று வாரிய பகுதியில் கோகுல் என்ற இளைஞர் மதுபோதையில் சிலர் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முற்பட்டுள்ளனர்.

போதையில் போலீஸ் வாகனம் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கிய கும்பல்…6 பேர் கைது!

இதில் ஏற்பட்ட தகராறில் அந்த கும்பல் கற்களை வீசி காவல்துறையினரை தாக்கியுள்ளனர். அத்துடன் அங்கிருந்த 2 ஆட்டோக்கள் , வேன், ஒரு காரை அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரின் ஜீப் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. இதை அங்கிருந்த ஒருவர் செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார்.

போதையில் போலீஸ் வாகனம் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கிய கும்பல்…6 பேர் கைது!

இதுகுறித்து உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் தாக்குதல் நடத்தி அவர்களை தேடினர். இதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது