“ஆறு பேர் சேர்ந்து ஆறு மாத கர்ப்பிணியாக்கி ..”-.பழங்குடியின பெண்ணின் பரிதாப நிலை

 

“ஆறு பேர் சேர்ந்து ஆறு மாத கர்ப்பிணியாக்கி ..”-.பழங்குடியின பெண்ணின் பரிதாப நிலை

ஒரு பழங்குடியின 14 வயது பெண்ணை ஆறுபேர் சேர்ந்து கற்பழித்து கர்ப்பிணியாக அலைய விட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .
ஒடிஷா மாநிலம் ராயகடவில் ஒரு 14 வயது பழங்குடியின பெண் ஆறு மாத கர்ப்பத்துடன் அங்குள்ள
போலிஸ் நிலையத்துக்கு வந்து தன்னை ஆறு பேர் சேர்ந்து ஆறு மாதத்திற்கு முன்பு பலாத்காரம் செய்து விட்டதாகவும் ,இதனால் இப்போது தான் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவர்களை கைது செய்யுமாறும் அவர்களின் பெயர்களை வெளியிட்டார் .

“ஆறு பேர் சேர்ந்து ஆறு மாத கர்ப்பிணியாக்கி ..”-.பழங்குடியின பெண்ணின் பரிதாப நிலை


இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலிசார் அந்த பெண்ணை விசாரித்த போது அவர் சொன்ன தகவலைக்கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள் .அந்த பெண்ணின் கூற்றுப்படி அந்த 14 வயது பழங்குடியின பெண் அங்குள்ள ஒரு ஆற்றங்கரையில் குளித்துக்கொண்டிருந்த போது அந்த ஊரைசேர்ந்த ஆறு பேர் அந்த பெண்ணை பலவந்தமாக அங்குள்ள புதர் பக்கம் தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளார்கள் .பிறகு இந்த விஷயத்தை எவரிடமும் சொல்ல கூடாதென்று மிரட்டியுள்ளார்கள் .இதனால் அந்த பெண் பயந்து கொண்டு இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளார் .பிறகு நாளாக நாளாக அவர் கர் பமானதும் வயிறு காட்டிக்கொடுத்துள்ளது .இதனால சந்தேகப்பட்ட அவரின் தாயார் அவரை மிரட்டி விசாரித்த போது தன்னை ஆறு பேர் சேர்ந்து ஆறு மாதத்திற்கு முன்பு பலாத்காரம் செய்ததை கூறியதும் அவர்கள் போலீசில் அந்த நபர்கள் மீது புகார் தந்தார்கள் .
போலீசார் அந்த ஆறு பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

“ஆறு பேர் சேர்ந்து ஆறு மாத கர்ப்பிணியாக்கி ..”-.பழங்குடியின பெண்ணின் பரிதாப நிலை