சசிகலாவுக்கு 5 மண்டலங்களில் வரவேற்பு

 

சசிகலாவுக்கு 5 மண்டலங்களில் வரவேற்பு

8.2.2021 நாளை சுபமுகூர்த்த தினத்தில் சசிகலா தமிழகம் திரும்புகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரு சிறை சென்றவர் இடையில் இரண்டு முறை பரோலில் வந்து சென்றார். நாளை கர்நாடகாவின் தேவனஹல்லியில் இருந்து புறப்படும் அவருக்கு தமிழக எல்லையான ஓசூரில் நான்கு இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அத்திப்பள்ளியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சசிகலாவுக்கு 5 மண்டலங்களில் வரவேற்பு

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை என வரும் சசிகலாவுக்கு ஐந்து மண்டலங்களாக பிரித்து அங்கே வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

வழிநெடுகிலும் சசிகலாவை வரவேற்று போஸ்டர், பேனர், கொடி, தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சசிகலாவுக்கு 5 மண்டலங்களில் வரவேற்பு

சசிகலாவை வரவேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து அமமுகவினர் ஓசூர் செல்கின்றனர்.

சசிகலாவுக்கு 5 மண்டலங்களில் வரவேற்பு